பாயும் ஒளி நீ எனக்கு...
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
என் நல்ல உயிரே கண்ணம்மா!
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா...
தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!
— மகாகவி பாரதியார்